ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இது குறித்து இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த புல்வாமா தாக்குதல் உலகிற்கு காட்டியுள்ளது. மேலும் இதற்கு காரணமான பாகிஸ்தானை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த உலக நாடுகள் கை கொடுக்க வேண்டும் எனவும், தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.