பாலிவுட் நடிகை ஷபனா ஆஷ்மி விரைவில் குணமடைய வேண்டும் என பிரதிப்பதாக இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து பூனேவுக்கு பிரபல பாலிவுட் நடிகையான ஷபனா ஆஷ்மி காரில் சென்றுள்ளார்.அப்பொழுது ககல்பூர் என்ற இடத்தில் ஷபனா ஆஷ்மி பயணித்த கார்முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய நடிகை மீட்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி பாலிவுட் நடிகை ஷபனா ஆஷ்மி விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.