Advertisment

"தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்"... பிறந்தநாளில் பாரதியாரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி...

மகாகவி பாரதியாரின் 138 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பாரதியார் குறித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

Advertisment

modi tweet in tamil about barathiyar

அவரது அந்த ட்வீட்டில், "மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன. சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment

modi barathiyar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe