ADVERTISEMENT

அனைத்து அதிகாரமும் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார்... -சோனியா காந்தி

04:43 PM May 22, 2020 | kalaimohan

ADVERTISEMENT

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கரோனா தடுப்பு பணி, புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை, பொருளாதார மந்தநிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT


இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் டி ராஜா, சீதாராம் யெச்சூரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கு பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, அனைத்து அதிகாரங்களும் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மையமாக பிரதமர் அலுவலகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

அம்பன் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT