Skip to main content

"இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பங்கு பெறுங்கள்" - உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

pm modi

 

இந்தியப் பிரதமர் மோடி, 2021 ஆம் ஆண்டின் கடல்சார் உச்சிமாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில், 'மரைடைம் இந்தியா விஷன் 2030' என்ற புத்தகத்தை வெளியிட்டதோடு, சாகர் மந்தன்-மெர்கன்டைல் மரைடைம் டொமைன் விழிப்புணர்வு மையத்தையும் திறந்து வைத்தார்.

 

அதன்பிறகு கடல்சார் உச்சி மாநாட்டில் உரையாற்றியவர், 2030 ஆம் ஆண்டிற்குள்  23 நீர் வழிகளை இயக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறியுள்ளார். கடல்சார் மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:

 

இந்த உச்சிமாநாடு, இந்தத் துறை தொடர்பான பல பங்குதாரர்களை ஒன்று சேர்க்கிறது. கடல்சார் பொருளாதாரத்தை உயர்த்துவதில் நாம் பெரும் வெற்றியை அடைவோம் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த துறையில் இந்தியா இயற்கையாகவே ஒரு தலைவர். நம் தேசத்திற்கு வளமான கடல் வரலாறு உள்ளது. இந்த உச்சிமாநாட்டின் மூலம், இந்தியாவுக்கு வந்து எங்கள் வளர்ச்சிப் பாதையில் ஒரு பகுதியாக இருக்க, உலக நாடுகளை அழைக்க விரும்புகிறேன். கடல்சார் துறையில் வளர்வதிலும், உலகின் முன்னணி நீலப் பொருளாதாரமாக உருவெடுப்பதிலும் இந்தியா மிகவும் நம்பிக்கையாக உள்ளது.

 

இதற்கு முன்பு பார்த்திராத வகையில், எங்கள் அரசு நீர்வழிகளில் முதலீடு செய்கிறது. உள்நாட்டு நீர்வழிகள், சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான செலவு குறைந்த, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வழி எனக் கண்டறியப்பட்டுள்ளது. 2030-க்குள் 23 நீர்வழிகளை இயக்க இலக்கு வைத்துள்ளோம். இந்தியா, அதன் பரந்த கடற்கரையோரம் 189 கலங்கரை விளக்கங்களைக் கொண்டுள்ளது. 78 கலங்கரை விளக்கங்களை ஒட்டியுள்ள நிலத்தில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம்.

 

இவ்வாறு மோடி உரை நிகழ்த்தினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.