Skip to main content

எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி புதிய வேண்டுகோள்...

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

modi

 

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில்,  வரும் மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சரத்குமார், மாயாவதி, அகிலேஷ்யாதவ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்