பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை பூடான் புறப்பட்டுச் சென்றார்.
மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற பிறகு பூடான் நாட்டிற்கு செல்வது இதுவே முதன்முறை. இந்த இரண்டு நாள் பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்கை நட்பு ரீதியாகச் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும் அந்நாட்டின் 4 வது மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியாலையும் மோடி சந்தித்து பேச உள்ளார்.