Skip to main content

"முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்" - மக்களுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல்...

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

modi  launches ‘Atma Nirbhar Uttar Pradesh Rojgar Abhiyan'

 

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டறியும் வரை மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

 

கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையிலான ஆத்மநிர்பார் உ.பி. ரோஜ்கர் அபியான் என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "நான் அனைவருமே நம் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்திருப்போம். பிரச்சனைகளும் இருக்கவே செய்யும். ஆனால் இப்படி ஒரே சமயத்தில் அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையை உலகம் எதிர்கொள்ளும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தச் சிக்கலிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்பது தெரியாது. ஆனால், கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் வரையில், மக்கள் அனைவரும் பொதுவெளியில் இரண்டு கஜம் அளவு சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிவதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  

 

கரோனா வைரஸ் காலத்தில் உ.பி. தைரியத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்தது. அது கரோனாவைக் கட்டுப்படுத்திய விதம் எதிர்கொண்ட விதம் சிறப்பானது. உலகின் பல நாடுகளை விட உ.பி. பெரியது. கரோனாவின் போது உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்ட கடின உழைப்பைப் பார்க்கும்போது, அது குறைந்தது 85,000 உயிர்களைக் காப்பாற்றியிருக்கும் என்று சொல்லலாம். உ.பி.யில் 2017க்கு முன்னர் இருந்த அரசாங்கம் இயங்கிய விதத்தில் இந்த முடிவுகளை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. முந்தைய அரசாங்கங்கள் இருந்திருந்தால், குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் மற்றும் படுக்கைகளைக் காரணமாகக்கூறி இந்த மிகப்பெரிய சவாலைத் தவிர்த்திருக்கும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.