ADVERTISEMENT

“மோடி ஒரு முட்டாள்... துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவரா சென்றார்”- சித்தராமையா

12:34 PM Apr 20, 2019 | santhoshkumar

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைக்க பிரச்சாரங்கள் வலுவாக மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சில இடங்களில் பாஜக முதன்மை படுத்தி சொல்வது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிதான். பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு கொடுத்த பதிலடி தாக்குதலை வைத்து பாஜக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சித்தராமையா, “மோடி ஒரு முட்டாள். அரசியல் ஆதாயத்திற்காக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை கையில் எடுத்து பயன்படுத்துகிறார் அது மிகவும் தவறானது. இந்திய ராணுவப்படைதான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நடத்தியது. துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மோடியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினார். பின்னர், ஏன் மோடி இதை கூறி புகழ் தேடிக்கொள்கிறார்” என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT