Skip to main content

புதுவை வந்த பிரதமர் மாநிலத்திற்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு!

Published on 03/03/2018 | Edited on 03/03/2018
narayanasamy


புதுச்சேரி மாநிலத்திற்கு இதுவரை வந்த பிரதமர்களிலேயே நரேந்திர மோடிதான் மாநிலத்திற்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல் சென்றுள்ளார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

புதுச்சேரி மாநிலத்திற்கு இதுவரை வந்த பிரதமர்களிலேயே நரேந்திர மோடிதான் மாநிலத்திற்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல் சென்றுள்ளார். பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் அவர் நிதி குறித்து அறிவிக்காமல் சென்றுள்ளது வருத்தமளிக்கிறது. இருந்தபோதிலும் மத்திய அரசை தொடர்ச்சியாக அனுகி புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை பெறுவோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்தபோது நேரடியாக சந்தித்து கடிதம் அளித்துள்ளோம். காவிரி நீர் விவகாரத்தில் புதுச்சேரியை பொறுத்தவரையில் தமிழகமும், கர்நாடகவாவும் குற்றவாளிகளே. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தால் மத்திய அரசு, உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்.

தொடர்ந்து வங்கிகளில் பல தொழிலதிபர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பி செல்லும் சம்பவங்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது.   வாராக்கடன் ஒன்பது ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வங்கிகளில் நிதி மோசடி செய்தவர்கள் குறித்து பிரதமர் மோடி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இதில் அரசியல் பிரமுகர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது அரசியல் பழிவாங்கும் செயல். ப.சிதம்பரம் மத்திய அரசை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருவதால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. கார்த்திக் சிதம்பரம் விரைவில் நிரபராதி என தெரியவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.