புதுச்சேரி மாநிலத்திற்கு இதுவரை வந்த பிரதமர்களிலேயே நரேந்திர மோடிதான் மாநிலத்திற்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல் சென்றுள்ளார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
புதுச்சேரி மாநிலத்திற்கு இதுவரை வந்த பிரதமர்களிலேயே நரேந்திர மோடிதான் மாநிலத்திற்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல் சென்றுள்ளார். பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் அவர் நிதி குறித்து அறிவிக்காமல் சென்றுள்ளது வருத்தமளிக்கிறது. இருந்தபோதிலும் மத்திய அரசை தொடர்ச்சியாக அனுகி புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை பெறுவோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்தபோது நேரடியாக சந்தித்து கடிதம் அளித்துள்ளோம். காவிரி நீர் விவகாரத்தில் புதுச்சேரியை பொறுத்தவரையில் தமிழகமும், கர்நாடகவாவும் குற்றவாளிகளே. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தால் மத்திய அரசு, உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்.
தொடர்ந்து வங்கிகளில் பல தொழிலதிபர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பி செல்லும் சம்பவங்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது. வாராக்கடன் ஒன்பது ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வங்கிகளில் நிதி மோசடி செய்தவர்கள் குறித்து பிரதமர் மோடி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இதில் அரசியல் பிரமுகர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது அரசியல் பழிவாங்கும் செயல். ப.சிதம்பரம் மத்திய அரசை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருவதால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. கார்த்திக் சிதம்பரம் விரைவில் நிரபராதி என தெரியவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுவை வந்த பிரதமர் மாநிலத்திற்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு!
சார்ந்த செய்திகள்
Next Story
'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி
'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.
Next Story
“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி
7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு. காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.
திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?.
அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார்.