Skip to main content

'நைஸ்' தாக்குதல்; பிரதமர் மோடி கண்டனம்...

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

modi condemns nice incident

 

பிரான்ஸ் நாட்டை உலுக்கியுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற கத்திக் குத்து தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

பிரான்ஸில் உள்ள 'நைஸ்' நகரின் தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடந்துகொண்டிருந்த போது, கத்தியுடன் நுழைந்த நபர், அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினார். இதில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதில், 45 வயது மதிக்கத்தக்க வின்சென்ட் லோக்ஸ் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் இறந்தார். மேலும், பெண் உட்பட இரண்டு பேர் கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுப் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த போலீஸார் தேவாலயப் பகுதிக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், அந்த நபர் ஒத்துழைக்காததால், அவரை சுட்டுப் பிடித்தனர். பிறகு நடைபெற்ற விசாரணையில் தாக்குதல் நடத்தியது 21 வயது மதிக்கத்தக்க வடக்கு ஆப்பிரிக்காவின் துனிசியாவைச் சேர்ந்த பிரஹிம் அவுசவுய் என்ற நபர் எனத் தெரியவந்துள்ளது. 

 

பிரான்ஸ் நாட்டை உலுக்கியுள்ள இந்த கத்திக் குத்துத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பிரதமர் மோடியின் பதிவில், "நைஸ் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதல் உட்பட பிரான்சில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த மற்றும் மனமார்ந்த இரங்கல். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பிரான்ஸுடன் துணை நிற்கும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.