பிரதமர் மோடி தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு மஹாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை இவரின் கீழ் இருக்கும் மத்திய அரசு தொடங்கிவைத்தது.
இந்நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி(இன்று) தூய்மையே உண்மையான சேவை என்று புதிய திட்டத்தை தொடங்கியுள்ளர். இதன் ஒரு பகுதியாக பஹர்காஞ்சில் உள்ள பாபாசாகிப் அம்பேத்கர் உயர்நிலை பள்ளியில் பிரதமர் மோடி சுத்தம் செய்தார்.