Advertisment

'பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாது' பாஜக மூத்த தலைவர் பகீர் பேச்சு!

பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போனவர். மற்றக் கட்சித் தலைவர்களை மட்டுமல்லாமல் தன் கட்சித் தலைவர்களையும் தைரியமாக விமர்சிப்பவர். இந்நிலையில் நாட்டின் பொருளாதார மந்தம், வெங்காய விலை உயர்வு ஆகியவற்றைப் பற்றி கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisment

gh

இந்நிலையில், இதுதொடர்பாக அவர் பேசியதாவது " வெங்காய விலை உயர்வு நமது அரசின் தோல்வி. மக்களின் கைகளில் பணம் இல்லை. பணம் இருந்தாலும் அதனை செலவு செய்யப் பயப்படுகிறார்கள். பொருளாதாரத்தின் நிலை குறித்து 7 முறை பிரதமருக்கு கடிதம் எழுதினேன். பிரதமருக்கு பொருளாதாரம் புரியவேண்டும், அவருக்கு பொருளாதாரம் புரியாது. பொருளாதாரம் மாற்றம் வந்தால் தான் இது எல்லாம் சரியாகும்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe