கேரளாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று காலை கொச்சி வந்தடைந்தார். பின்னர், மோடியும் பினராயி விஜயனும் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். அதில் முதல் கட்ட நிதியாக கேரளாவுக்கு 500 கோடி வழங்குவதாக அறிவித்தார் மோடி.
மேலும், பிரதமர் நிவாரணநிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் நிதி அறிவித்துள்ளார்.