மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து மே26 ஆம் தேதி குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

modi achievement after nehru and indra gandhi

இந்நிலையில் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டு முறை தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போகும் மூன்றாவது பிரதமரை மோடி இருப்பார் என கணிக்கப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் பாஜக 282 இடங்களில் தனிப்பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வந்தாலும் பாஜக தனிப்பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை பெரும் என்று கணிக்கப்படுகிறது. எனவே நேரு, இந்திராவிற்கு பிறகு இரண்டாவது முறையாக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கு மூன்றாவது பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுவார்.