Skip to main content

அதிகாரத்தில் 20 ஆவது ஆண்டு... பிரதமருக்கு அமித்ஷாவின் வாழ்த்து...

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

modi on 20 th year in power

 

பிரதமர் மோடி தொடர்ச்சியாக 19 ஆண்டுகள் முதல்வர் மற்றும் பிரதமர் பதவிகளை வகித்ததற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் மாநிலத்தின் முதல்வராகத் தனது பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று குஜராத் முதல்வராகப் பதவிவகித்தார். அதன்பின் 2014 மக்களவை தேர்தலின்போது பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு, நாடு முழுவதும் மிகப்பெரிய மக்கள் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றார். அதன்பின்னர் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வென்று பிரதமராக மோடி தொடர்ந்து இருந்து வருகிறார்.

 

ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் தலைவராக எவ்விதமான இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 19 ஆண்டுகள் செயல்பட்டு, 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "இன்று நரேந்திர மோடி முதல்வராகவும் பிரதமராகவும் 19 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவர் குஜராத்தின் முதல்வரானபோது, மத்தியில் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தது. நீண்ட காலமாக, தனி ஒரு கட்சி ஆட்சிக்கு வரவில்லை. அதன்பிறகும் 10 வருடங்கள் கூட்டணி அரசே ஆட்சியிலிருந்தது.

 

இதன் காரணமாக ஊழல், பாதுகாப்பில் சமரசம், முதுகெலும்பு இல்லாத வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள், ஏழைகளை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பார்கக்கூடிய ஆட்சி நடந்தது. இது மக்களிடையே ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது

 

Ad

 

அப்போது மோடிக்குக் கட்சி ஒரு வாய்ப்பு வழங்கியபோது, இந்த தேச மக்கள் அவருடன் நின்றனர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சிக்கு முழுமையான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் முறையாகக் காங்கிரஸ் அல்லாத தலைவர் இந்த நாட்டின் பிரதமர் ஆனார்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.