Skip to main content

டார்க்-வெப்பில் விற்கப்படும் வாடிக்கையாளர்களின் தரவுகள்?  - பணப்பரிவர்த்தனை நிறுவனம் விளக்கம்!

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

darkweb

 

இந்தியாவில் உருவாக்கப்பட்ட பணப் பரிவர்த்தனை செயலி மொபிக்விக் (mobikwik). இந்தச் செயலி, டிஜிட்டல் வாலட் (digital wallet) முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்தநிலையில், மொபிக்விக் வாடிக்கையாளர்களின் விவரங்கள், டார்க் வெப்பில் விற்பனை செய்யப்படுவதாக சுதந்திரமான இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

 

முதலில் ராஜ்ஷேகர் ராஜஹாரியா என்ற இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், சுமார் 11 கோடி இந்தியர்களின் தொலைப்பேசி எண், ஆதார் அட்டை தரவுகள், கடவுச்சொற்கள், வங்கிக் கணக்கு மற்றும் கிரடிட் கார்டு விவரங்கள் கசிந்து விட்டதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து மேலும் சில இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், 35 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் அடங்கிய டேட்டா-பேஸ் டார்க்-வெப்பில் வெளியாகி இருப்பதாகக் கூறினர். மேலும், உலகின் மிகப்பெரிய வாடிக்கையாளர் விவரங்கள் கசிந்த நிகழ்வாக இது இருக்கலாம் எனவும் அவர்கள் கூறினர்.

 

இந்தவிவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் மொபிக்விக் நிறுவனம், வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசியவில்லை என விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம், "நாங்கள் இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்தோம். எந்தப் பாதுகாப்பு குறைபாடும் கண்டுபிடிக்கப்படவில்லை. பயனர்கள் மற்றும் எங்கள் நிறுவனத்தின் தகவல்கள் பாதுகாப்பானது மற்றும் பத்திரமானது" எனத் தெரிவித்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க 'Paytm'- க்கு தடை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

RBI issues ban on 'Paytm' for adding new customers

 

புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க 'Paytm' நிறுவனத்திற்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய ரிசர்வ் வங்கி இன்று, அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A இன் கீழ், Paytm Payments Bank Ltd- ஐ புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கி அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் விரிவான கணினி தணிக்கையை நடத்த ஒரு ஐடி தணிக்கை நிறுவனத்தை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை விதியை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Paytm Payments Bank Ltd மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பது, IT ஆடிட்டர்களின் அறிக்கையை மதிப்பாய்வு செய்த பிறகு ரிசர்வ் வங்கி வழங்கும் குறிப்பிட்ட அனுமதிக்கு உட்பட்டது." இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

Next Story

ஏர் இந்தியா நிறுவனத்தில் சைபர் தாக்குதல்: லட்சக்கணக்கானோரின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

AIR INDIA

 

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தின் இணையதளத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 45 லட்சம் பயணிகளின் பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் தகவல்கள், கிரெடிட் கார்ட் தகவல்கள், பயண விவரங்கள் உள்ளிட்டவை கசிந்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

கடந்த 10 வருடங்களில், அதாவது 2011 பிப்ரவரி முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரிவரை ஏர் இந்தியா விமான சேவையைப் பயன்டுத்திய 45 லட்சம் பேரின் தகவல்கள் கசிந்துள்ளதாக கூறியுள்ள ஏர் இந்தியா நிறுவனம், கசிந்த தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக எந்தத் தடயமும் இதுவரை இல்லை என தெரிவித்துள்ளது.

 

தகவல்கள் கசிவைத் தொடர்ந்து, பயணிகள் தங்களது கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியுள்ள ஏர் இந்தியா, தகவல் கசிவு குறித்த விசாரணைக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆணையங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. கிரெடிட் கார்டு விவரங்கள் கசிந்தாலும், கிரெடிட் கார்டுகளின் சி.வி.வி விவரங்கள் கசியவில்லை என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.