Skip to main content

கொள்ளையடிக்க காரில் சென்ற கும்பல்;5பேருடன் ஆயுதங்கள் பறிமுதல்!

Published on 12/12/2018 | Edited on 13/12/2018

புதுச்சேரி  வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற ஜிந்தா கோதண்டராமன்  போலீசாரை தீவிரமாக ரோந்து சென்று குற்றங்கள் நடைபெறாமல் இருக்க உத்தரவிட்டார். இதையடுத்து வடக்கு பகுதிக்கு உட்பட்ட போலீசார்கள் அனைவரும் தினமும் தீவிர ரோந்து சென்று வந்தனர். 

 

இந்த நிலையில் வடக்குபகுதி எஸ்.பி. தலைமையிலான குற்றப்பிரிவு போலீசாருக்கு  காரில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களும்  மேட்டுப்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் ஆகியோர் தலைமையிலான குற்றப்பிரிவு போலிசாரும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்த கும்பல் மேட்டுப்பாளையம் வழியாக வருவதாக அறிந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு மேட்டுப்பாளையம் கால்நடை ஆஸ்பத்திரி அருகே ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றதால் அதேபகுதியில் நின்ற மற்ற போலீசார் தங்கள் மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தினர். இதையடுத்து அந்த கார் நின்றது. உடனே போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். 

 

police

 

காரினுள் 5 பேர் இருந்தனர். காரை சோதனை செய்தபோது கத்தி மற்றும் இரும்பு ராடுகள் இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும், காரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சண்முகபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்த மார்ட்டின்(26), சுரேஷ்(24), வாணரபேட்டையை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(25), மூலங்குளம் மோதிலால் நகரை சேர்ந்த தமிழ்வாணன்(26), வில்லியனூர் மணவெளி பாலாஜி நகரை சேர்ந்த மாணிக்கம்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஜ.ஆர்.பி.என். போலீஸ் கோபி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ராமுவின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. அனைவரும் கூட்டாக கொள்ளையடிக்கும் நோக்கில் காரில் சுற்றியதும் தெரியவந்தது. 

 

 

இதையடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கத்தி, 3 இரும்பு ராடுகள், 5 செல்போன்கள், அவர்கள் ஓட்டி வந்த கார், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மார்ட்டின் மீது ஜ.ஆர்.பி.என். கோபி  கொலை வழக்கும் தற்போது அவன்மீது பிடிவாரண்டும் உள்ளது.  ஸ்டீபன் ராஜ், தமிழ்வாணன் ஆகிய இருவர் மீதும் வழக்குகள் உள்ளன. 

 

கொள்ளை நடக்கும் முன்பே  குற்றவாளிகளை பிடித்த போலீசாரை வடக்கு எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் பாராட்டினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.