Skip to main content

கேரளாவில் தொடர்ந்து 51 ஆண்டுகளாக எம்.எல்.ஏ! சாதனை படைத்த முன்னாள் முதலமைச்சர்!  

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

MLA in Kerala for 51 consecutive years! Record-breaking former chief minister!

 

கேரளாவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்துவரும் காங்கிரஸ் உம்மன்சாண்டி, மக்களோடு மக்களாக நெருங்கிப் பழக கூடியவர். அவர் முதல்வராக இருந்த போது சொந்த கட்சியினர் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரிடமும் நெருங்கிப் பழக கூடியவர். இதனால் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி தொண்டர்களும் உம்மன்சாண்டி மீது நல்ல ஒரு மரியாதையை காட்டி வந்தனர்.

 

இந்த நிலையில் உம்மன்சாண்டி 1970-ல் தனது 27 ஆவது வயதில் சொந்த மாவட்டமான கோட்டயம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்றிலிருந்து தொகுதி மக்களிடத்தில் நல்லதொரு பழக்கத்தையும் மரியாதையும் காட்டி வந்த உம்மன்சாண்டி, அந்த தொகுதியில் தொடர்ந்து 11 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். அவரை எதிர்த்து பிரதான கட்சியான மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தொடர்ந்து போட்டியிட்டும்  உம்மன்சாண்டியை தோற்கடிக்க முடியவில்லை.

 

மேலும்  2004 மற்றும் 2016ல் இரண்டு முறை கேரளா முதல்வராகவும் இருந்துள்ளார். அது போல் 4 முறை அமைச்சராகவும், 4 முறை சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 18,728 நாட்களை கடந்து சட்டமன்ற உறுப்பினர் ஆக தொடர்ந்து வருகிறார்.

 

இந்நிலையில் 51 ஆண்டுகளாக ஒரே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடரும் உம்மன்சாண்டிக்கு  கேரளா காங்கிரசார் மற்றும் புதுப்பள்ளி தொகுதி மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுப்பள்ளியில் மீண்டும் வாகை சூடிய காங்கிரஸ்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

kerala puthuppally constituency by election Congress took oath again

 

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அதிகாலை 04.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தவர். கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்றுத் தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி.

 

உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் நாடு முழுவதும் உள்ள 6 மாநிலங்களில் காலியாக உள்ள புதுப்பள்ளி தொகுதி உட்பட 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 

புதுப்பள்ளி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாண்டி உம்மன் 78 ஆயிரத்து 98 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 41 ஆயிரத்து 644 வாக்குகளுடன் சிபிஎம் கட்சி  2 ஆம் இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3 ஆம் இடமும் பிடித்தன. தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சி தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

புதுப்பள்ளி இடைத்தேர்தல்; சாண்டி உம்மன் முன்னிலை

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

kerala puthupalli by-election Sandy Ooman lead

 

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அதிகாலை 4.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.

 

கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்றுத் தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆவார்.

 

உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொகுதிக்கு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் போட்டியிட்டார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி பதிவான வாக்குகள் தற்போது இன்று எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் முன்னிலை வகித்து வருகிறார். அதே சமயம் பாஜக வேட்பாளர் லிஜின் லால், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெய்க் தாமஸ் ஆகியோர் பின் தங்கியுள்ளனர்.