Skip to main content

எம்.எல்.ஏவை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்ட்கள். – பின்னணி என்ன ?.

Published on 23/09/2018 | Edited on 23/09/2018

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது அரகுவேலி என்கிற பழங்குடியினருக்கான தனி தொகுதி. ஓடிஷா மாநிலத்தின் எல்லையோரம் உள்ள தொகுதி. இந்த தொகுதியில் 2014ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக நின்றவர் பொடபயலு மண்டலத்தில் உள்ள நதிமிவாடா கிராமத்தை சேர்ந்த பழங்குடியான பாலண்ணாவின் மகன் கிடாரி சர்வேஸ்வர ராவ், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் இதே தொகுதியில் நின்றவர் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரிசோமா. இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிடாரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவேரிசோமாவை விட 29 ஆயிரம் வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்.

 

mla

 

2016 ஏப்ரல் மாதம் எம்.எல்.ஏ கிடாரி தெலுங்கு தேசம் கட்சியில் போய் சேர்ந்தார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதால், ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் தனது தொகுதியில் கிராமத்தை பார்வையிடுதல் ( வில்லேஜ் விசிட் ) நடத்துகிறார் கிடாரி. அந்த நிகழ்ச்சிக்கு செப்டம்பர் 23ந்தேதி வில்லேஜ் விசிட்க்கு போய்விட்டு தனது ஊருக்கு காரில் திரும்பிவந்துள்ளார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரிசோமா, தெலுங்கு தேசம் கட்சியின் மற்ற நிர்வாகிகளும் காரில் இருந்துள்ளனர். இவர்களின் கார் மதியம் 2 மணியளவில் தும்பிரிகுடா வட்டத்தில் உள்ள லிப்பிடிபுட்டா என்கிற கிராமத்தின் வழியாக சென்றுக்கொண்டு இருந்தபோது, சாலையின் குறுக்கே நின்று எம்.எல்.ஏவின் காரை ஒருபெண் தலைமையில் வந்த மாவேயிஸ்ட்கள் படையினர் மடக்கி நிறுத்தியுள்ளனர்.

 

mla

 

அதன்பின் நடந்தவற்றை எம்.எல்.ஏவின் பாதுகாவலர் சுவாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, கார் நின்றது, அப்போது அவர்கள் கையில் ஏ.கே47 துப்பாக்கிகள் இருந்தன. நான் உடனே சுதகரித்துக்கொண்டு படுத்துக்கொள்ளச்சொன்னேன். அவர்கள் காரை நோக்கி துப்பாக்கி சுட்டார்கள். 15 நிமிடத்துக்கு பின், மாவேயிஸ்ட் படை அங்கிருந்து தப்பி காட்டுக்குள் சென்று மறைந்தது. நாங்கள் பார்த்தபோது, எம்.எல்.ஏ (கிடாரி சர்வேஸ்வரராவ்) சம்பவயிடத்திலேயே இறந்துயிருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் சிலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களை மருத்துவமனைக்கு வழியில் வந்த வாகனங்களை மடக்கி அனுப்பிவைத்தேன் என்றார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முன்னாள் எம்.எல்.ஏ சிவேரிசோமா வும் இறந்துள்ளார். சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,

 

எம்.எல்.ஏவை குறிவைத்தது ஏன் ?.

 

 

ஆந்திரா மாநிலத்தின் அரகுவேலி தொகுதி மலைப்பகுதி. சுற்றுலாப்பகுதியாகவும் உள்ளது. ஆந்திரா – ஓரிசா மாநில எல்லையில் இந்த தொகுதிக்குள் வரும் அனந்தகிரி, சன்கரிமிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் அதிகளவில் கற்குவாரிகள் உள்ளன. இந்த இந்த மலைகளை குறிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் வளைத்துப்போட்டு பாக்ஸைட் என்கிற கனிமப்பொருளை வெட்டியெடுத்து வருகின்றன.

 

mla

 

மாநிலத்தில் இந்த பகுதியில் அதிகளவில் பாக்ஸைட் என்கிற கனிம தாதுவை வெட்டியெடுப்பதால் பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அதனை எதிர்த்தார். அதனாலயே 2014ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிடாரி வெற்றி பெற்றார்.

 

 

கிடாரி பதவிக்கு வந்தபின், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னால் எம்.எல்.ஏவான சிவேரிசோமா வுடன் மறைமுகமாக கைகோர்த்தார். அவர் ஏற்கனவே சட்டவிரோதமாக கனிமவளங்களை வெட்டியெடுக்கும் தொழிலில் இருந்தார். இதனாலயே மக்கள் அவரை தோற்கடித்தனர். அவர் ஆதரவுடன் கார்ப்பரேட் கம்பெனிகளோடு கைகோர்த்துக்கொண்டார் கிடாரி. அதோடு, சட்டவிரோதமாக அவரும் தனது மகன்கள் சந்தீப், சர்வன்குமார் பெயரில் கம்பெனி தொடங்கி மலைகளை வளைத்துப்போட்டு அங்கு பாக்ஸைட் வெட்டியெடுக்க தொடங்கினார். ஆளும் தெலுங்குதேசம் கட்சி கிடாரி மீது வழக்குள் பதிவுசெய்தது.

 

 

2015ல் இந்த பகுதியில் 1200 ஹெக்டர் வனத்துறை பகுதி ஆந்திரா மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த நிறுவனத்தோடு சேர்ந்து சட்டப்படியும் கனிமங்களை வெட்டியெடுக்கலாம் என முடிவு செய்தார். அதோடு, தன் மீதுள்ள வழக்குகளையும் கைவிட வைக்க முடியும் என முடிவு செய்து சிவோரிசோமா மூலமாக தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறினார் கிடாரி.

 

mla

 

மலைவாழ் மக்களின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டதோடு, அந்த மலையை கார்ப்பரேட் கம்பெனிகள் கனிமங்கள் வெட்டியெடுக்க அரசு விடும் ஒப்பந்தங்களுக்கு சாதகமாக இருந்ததோடு பழங்குடியின மக்களை மலையை விட்டு துரத்துவது, எதிர்ப்பவர்களை கொன்றுவந்தனர். இதனால் பழங்குடியின மக்களிடம் செல்வாக்குப்பெற்ற மாவோயிஸ்ட்களின் கோபத்துக்கு ஆளாகினார் எம்.எல்.ஏவான கிடாரி. இதுப்பற்றி அவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர் மாவோயிஸ்ட்கள்.

 

 

உளவுத்துறை எச்சரிக்கை…….

 

 

விசாகப்பட்டினத்தின் புற மாவட்டங்களில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் கிராமப்புறங்களுக்கு செல்வதாக இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்கிற வேண்டுக்கோள் விடப்பட்டுயிருந்தது. அதேபோல் மாவோயிஸ்ட்களின் பட்டியலில் முதல் இடத்தில் உங்கள் பெயர் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை நோட்ஸ் அனுப்பியுள்ளது என்று கிடாரிக்கு போலிஸ் தகவல் கூறியுள்ளது. அப்படியிருந்தும் அவர் போலிஸ்க்கு தகவல் சொல்லாமல் சென்றுள்ளார். இதனை விசாகப்பட்டினத்தின் புறநகர் எஸ்.பி ராகுல்தேவ்சர்மாவும் உறுதி செய்கிறார்.

 

 

கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவரான அக்கிராஜீ நடமாட்டம் ஆந்திரா – ஒடிசா எல்லையில் உள்ள அரகுவேலி பகுதியில் காணப்படுகின்றன என அரசை அலார்ட் செய்துள்ளது உளவுத்துறை.  

 

 

 

வேட்டையாடிய 50 பேர் கொண்ட மாவோயிஸ்ட் குழு.  

 

எம்.எல்.ஏ கிடாரியை கடந்த சில வாரங்களாக நன்றாக பின்தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை கண்காணித்தபின்பே இந்த ஆப்ரேஷனில் மாவோயிஸ்ட்கள் ஈடுப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே என்கிற ராமகிருஷ்ணா தான் இந்த ஆப்ரேஷனுக்கு தலைமை தாங்கியதாக கூறப்படுகிறது. 50 மாவோயிஸ்ட்கள் இந்த தாக்குதலில் ஈடுப்பட்டனர் என்கின்றது முதல்கட்ட தகவல். அதில் பெண்களும் இருந்தனர் என்கின்றனர்.

 

​இது மனிததன்மையற்ற செயல் எனவும், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தவர் மறைந்த எம்.எல்.ஏவும், முன்னாள் எம்.எல்.ஏவும் என இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் சந்திரபாபுநாயுடு.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை; ஆனால் ஒரு கண்டிஷன்’ - சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Chandrababu Naidu's promise Stipend for Backward People at lok sabha election campaign

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களைக் கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உயிர் துறந்த மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 197வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைந்ததும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். அதில், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார். 

இவர் ஏற்கனவே, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்தால், தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“ஆட்சிக்கு வந்தால் தரமான மதுபானம்” - சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Chandrababu Naidu action announcement on If come to power, quality liquor

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. 

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டையும், நிர்வாகத்திறன் குறித்து தெலுங்கு தேசம் கட்சி விமர்சனம் செய்து வருகிறது. அதே போல், தெலுங்கு தேச கட்சியை பற்றியும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. 

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களை கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, குறைந்த விலையில், தரமான மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதியை அளித்துள்ளார்.

இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது, “ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்ததும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார். அனைத்து பொருட்களின் விலையும், வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இவற்றில் உழைக்கும் மக்களின் மதுபானங்களும் விதி விலக்கல்ல. மதுவின் விலையை உயர்த்தியவர்கள், அதற்கேற்றவாறு தரத்தையாவது உயர்த்திருக்க வேண்டும். அதிக லாபத்துக்கு தரமற்ற மதுவை விநியோகித்து நம் மக்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள். தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் போது தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானத்தை அளிக்கவும் நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று கூறினார்.