Skip to main content

மனைவி செய்த தவறு - வீடியோவை பார்த்த கணவன் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை

Published on 04/08/2018 | Edited on 04/08/2018
Suicide


மனைவி செய்த தவறை வீடியோவில் பார்த்த கணவன் கடும் அதிர்ச்சியடைந்ததுடன், தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுத்த மனைவியும் தீக்காயம் அடைந்து உயிரிழந்தார். 
 

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் கலசிங்கா கிராமத்தை சேர்ந்தவர் குல்விந்தர் சிங். 35 வயதான இவருக்கு திருமணமாகி மனைவியும், 8 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குல்விந்தர் சிங், ஜோர்டனில் பணியாற்றி வருகிறார். அடிக்கடி வர முடியாது. வருடத்திற்கு இரண்டு முறை போல்தான் வருவார். குடும்பத்தின் மாத செலவிற்கு பணம் அனுப்பும் அவர், அவ்வப்போது தொலைபேசியில் மனைவி மற்றும் குழந்தைகளோடு பேசுவோர். 

 

 


குல்விந்தர் சிங் வெளிநாட்டில் இருப்பதால் அவரது மனைவிக்கு அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் சில உதவிகளை செய்து வந்துள்ளார். நாளடைவில் அவர்கள் நட்பாக பழகியுள்ளனர். நட்பு காதலாக மாறியது. பணம் கொடுக்கல், வாங்கலும் இருந்தள்ளது. இதனை தெரிந்துகொண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், அவர்கள் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்துள்ளனர். 
 

மேலும், அந்த வீடியோவை குல்விந்தர் சிங் மனைவியிடம் காட்டி, அடிக்கடி மிரட்டியுள்ளனர். இந்த வீடியோவை உனது கணவருக்கு அனுப்பி வைப்போம் என்றும், பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து மிரட்டியதால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அப்பெண், இந்த விவகாரம் வெளியே தெரியக் கூடாது என்றும், அந்த கும்பலிடம் இருந்து அந்த வீடியோவை வாங்கி அழித்துவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட நபரிடம், தனது வீட்டுக்கு வரக்கூடாது என்றும், வெளியில் செல்லும்போது தன்னை சந்திக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
 

மூன்று மாதங்களுக்கு முன்பு அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் வீடியோவை வைத்து மிரட்டி வந்த நான்கு பேருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அந்த கும்பல் குல்விந்தர் சிங்குக்கு வீடியோவை அனுப்பி வைத்தனர். வீடியோவை பார்த்து கோபம் அடைந்த அவர் நாடு திரும்பி உள்ளார். 
 

 

 

வீட்டுக்கு வந்த இரண்டு நாட்கள் மனைவி மீது கோபமாக இருந்த குல்விந்தர் சிங், அவரிடம் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். இதனை புரிந்து கொண்ட அவரது மனைவி மன்னிப்பு கேட்டுள்ளார். தான் செய்தது தவறுதான், மன்னிக்க முடியாத குற்றம்தான், இனி அந்த தவறு நடக்காது, உங்கள் முகத்தில் முழிக்கவே தனக்கு தகுதியில்லை, நமது குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் என அப்பெண் கூறியுள்ளார்.

 

 


இருப்பினும் கோபம் அடங்காத குல்விந்தர் சிங் தனது குழந்தைகள் 8 வயதான சோனல், 5 வயதான அபி ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றியதுடன், தனது மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை அவரது மனைவி தடுத்துள்ளார். அவர் எவ்வளவோ தடுத்தும், குல்விந்தர் சிங் மற்றும் குழந்தைகள் மூன்று பேரும் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். குல்விந்தர் சிங் மனைவி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். குழந்தைகளையும் தீ வைத்துக் கொளுத்திய இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tragedy of 11-year-old girl; Police serious investigation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு  தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.