Advertisment

வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிறுமி கற்பழிப்பு! - உ.பி.யில் பயங்கரம்

வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

Unnao

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது உன்னாவ் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி தனது குடும்ப நண்பர் ஒருவரால் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டார். அவ்வாறு அழைத்துச் சென்ற நபர், சிறுமியை தனி அறையில் நாள் முழுவதும் அடைத்துவைத்து, தனது உறவினர்கள் இருவருடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதுதொடர்பாக புகாரளித்த சிறுமி, ‘எனது தந்தை பொய்க்குற்றச்சாட்டுகளைக் கூறி எனது தாயாரை சிறைக்கு அனுப்பிவிட்டார். எப்போதும் வீட்டில் தனிமையில் இருந்த நான் வேலைக்கு செல்லலாம் என எண்ணிய நிலையில், எனது தந்தை குடும்ப நண்பர் ஒருவருடன் அனுப்பி வைத்தார். என்னை அழைத்துச் சென்ற அந்த நபர் தனது உறவினர்களுடன் சேர்ந்து என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர்’ என தெரிவித்துள்ளார்.

Advertisment

இவ்வாறு சிறைப்படுத்தப்பட்ட சிறுமியை மீட்க, அவரது தந்தை குற்றவாளிகளுக்கு ரூ.2 லட்சம் தந்ததும், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறியபோது, அதைக் கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமி கூறிய நிலையில், குற்றவாளிகளோடு சேர்ந்து, சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Child abuse Gang raped
இதையும் படியுங்கள்
Subscribe