Advertisment

தொடர்ந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அமைச்சர்கள்!

kl

Advertisment

இந்தியாவின் சில மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று (01.03.2021) முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று (02.03.2021) மதியம் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முதலாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுவரை 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe