Skip to main content

குறைந்தப்பட்ச ஊதிய பிரச்சனையை கையில் எடுக்கும் தேசிய கட்சிகள் !

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒரே மாதிரி ஊதியமாக குறைந்தபட்ச ஊதியம் பெறும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் இதுவே குறைந்தப்பட்ச ஊதியமாகும். இதற்காக குறைந்தப்பட்ச ஊதிய சட்டம் -1948 திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும். இந்த சட்டத்தில் கல்வி தகுதியை மையமாக வைத்தே ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு 2019 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நலத்துறை சார்பில் குறைப்பட்ச ஊதிய பட்டியலை வெளியிட்டது. 
 

minimum salary issues



இதில் தொழிலாளர்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவைகள் பின்வருமாறு Unskilled Workers, Semi Skilled Workers , Highly Skilled Workers , Skilled Wokers உள்ளிட்டவையாகும். இந்த வகை தொழிலாளர்களின் ஒரு நாள் குறைந்தப்பட்ச ஊதியம் ரூபாய் 450 முதல் 750 வரை வழங்க மத்திய தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் சட்டம் -1963 (Equal Pay For Equal Work Act - 1963)

சம வேலைக்கு சம ஊதியம் சட்டத்தை நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா? என்றால் கேள்வி குறித்தான். இந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் குழுவை அமைத்து நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டும்.  இந்த குழுவை தொழிலாளர்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். அப்போது தான்  சம வேலைக்கு சம ஊதியம் சட்டத்திற்கு உயிரூட்ட முடியும். மேலும் தொழிலாளர்களின் நலன் காக்க முடியும்.


குறைந்தப்பட்ச ஊதியத்தை ஏன் மாற்றியமைக்க வேண்டும் ?

இந்தியாவில் பெரும்பாலான படித்த இளைஞர்கள் பெறும் மாத ஊதியம் ரூபாய் 8,000 மட்டுமே. இதில் பொறியியல் படித்த இளைஞர்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில் , அப்படியே வேலை வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர்களின் மாத ஊதியம் குறைவாக உள்ளதால் தங்கள் குடும்பத்திற்கு தேவையானதை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுகிறார்கள்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் அந்நிறுவனங்களை கண்டு கொள்வதில்லை என்பது எவராலும் மறுக்க முடியாது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான அறிக்கையில் மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் குறைந்த பட்ச ஊதியத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை அளித்து வருகின்றனர். அதே போல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இளைஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே வேலை கிடைத்தாலும் மாத ஊதியம் குறைவு . எனவே அரசியல் கட்சிகள் இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு Minimum Wages Act - 1948-ல் திருத்தம் மேற்கொண்டு ஒவ்வொரு இளைஞர்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற வேண்டும் என்பதே இளைஞர்களின் விருப்பமாக உள்ளது.


பி . சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஊதியம்; ஊழியர்கள் போராட்டம்!

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

puducherry papsco union workers issue 

 

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 65 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஏ.ஐ.டி.யு.சி தலைமையில் கடந்த 14.9.2022 முதல் தொடர்ந்து 13 நாட்களாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்தனர்.

 

அப்போராட்டத்தின் விளைவாக 30.9.2022 அன்று அமைச்சர் அலுவலகத்தில், குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலாளர் உதயகுமார் முன்னிலையில் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையில் அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் 2 மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதென்றும், ஊழியர்கள் ஊதியம் பட்டுவாடா செய்வது அனைத்து கடன்களையும் தீர்ப்பது எனவும் அமைச்சர் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தார்.

 

அதனை ஏற்று ஊழியர்களின் தொடர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் அமைச்சர் உறுதியளித்தவாறு 2 மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, நிலுவை ஊதியம் வழங்குவது, நிலுவையில் உள்ள கடனை அடைப்பது போன்றவை நடைபெறவில்லை. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக 9.3.2023 அன்று காலை, துறையின் அமைச்சர் சாய் சரவணன் குமாரை சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் சந்தித்து கேட்டதற்கு ‘இப்பொழுதுதான் முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு வருகிறேன். முதலமைச்சர் பாப்ஸ்கோ நிறுவனத்தை நடத்த வேண்டாம்’ எனக் கூறினார். மேலும் 'இனிமேல் இந்தத் துறைக்கு நான் அமைச்சர் இல்லை. இனிமேல் என்னை வந்து பார்க்காதீர்கள். எதுவாக இருந்தாலும் முதலமைச்சரிடம் கேளுங்கள்' எனத் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து உடனடியாக முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் சொன்னதை தெரிவித்தோம். முதலமைச்சர் முழுமையாக காது கொடுத்து கேட்காமல் 'குழு அமைத்திருக்கிறேன்' என எங்களிடத்தில் தெரிவித்தார். அமைச்சரும், முதலமைச்சரும் பொறுப்பற்ற முறையில் முரண்பாடான கருத்துக்களை கூறி பாப்ஸ்கோ ஊழியர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வருவதாகவும் தேர்தலின் போது முதலமைச்சர் பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து நடத்தி ஊழியர்களின் நிலுவை சம்பளம் வழங்கப்படும் என வாக்குறுதியை அளித்தார். மேலும், அமைச்சர் அவர்கள் 4 மாதத்திற்கு முன்பு சங்கத்தோடு நடந்த பேச்சுவார்த்தையில் 2 மாதத்தில் பாப்ஸ்கோ நிறுவனம் திறந்து நடத்தப்படும் நிலுவை சம்பளம்  கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் தலைமையில் புதுச்சேரி சட்டமன்றம் முன்பு ஆறாவது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.

 

இப்போராட்டத்திற்கு பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, மாநில கவுரவத் தலைவர் வி.எஸ்.அபிஷேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

 

 

Next Story

ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

Salary hike for contract teachers; The Tamil Nadu government issued an ordinance!

 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பிரிவு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒப்பந்த முறையில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களையும் சேர்த்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

அரசாணையின் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரமாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாகவும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தால் ஆசிரியர்கள் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த ஆசிரியர்களான இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் ரூபாயும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9 ஆயிரம் ரூபாயும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு  ரூ.10 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு வந்தது. 

 

ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்ததன் அடிப்படையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலப்பிரிவு துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய 221 ஆசிரியர்களுக்கும் புதிதாக நிரப்பப்பட இருக்கும் 194 பணியிடங்களுக்கு சேர்த்து மொத்தமாக 415 தற்காலிக ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என பழங்குடியின நலப்பிரிவு இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட இருப்பதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலவாரியம் தெரிவித்துள்ளது.