Skip to main content

மீனைப்பிடி...காசைப்பிடி... யூ டியூப்பால் லட்சாதிபதியான தொழிலாளி!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறப்பார் என்பது உண்மை தான். கேரளாவை சேர்ந்த ஒருவர் கஷ்டத்தில் இருந்து மீண்டு இப்போது, புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார். ஒரு காலத்தில் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட அவர், இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்றால் அவரது திறமையும், தன்னம்பிக்கையும் தான்.

Millionaire growth worker by using You Tube chennel

கேரளாவின் மீனவ கிராமமான கும்பளங்கியை சுற்றிலும் உள்ள தெளிவான கழிமுக நீரை காண்பதற்கு அவ்வளவு வசீகரமாக இருக்கும். கடவுளின் தேசத்தில் உள்ள இந்த அழகான காட்சி, உன்னி ஜார்ஜ் வாழ்க்கையின் கஷ்ட காலங்களிலும் சரி, நல்ல காலங்களிலும் சரி, அப்படியே அவரது மனதில் தங்கியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு உன்னி ஜார்ஜ் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அடுத்த பேரிடியாக சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வைத்திய செலவுக்கே பணம் இன்றி அவதிப்பட்ட உன்னி, குடும்பத்தையும் கவனிக்க முடியாத நிலைக்கு ஆளானார்.

Millionaire growth worker by using You Tube chennel

 

உன்னியின் நிலைமை அறிந்து அவரது நண்பர்கள் சிலர் பண உதவி செய்தாலும், அது போதுமானதாக இல்லை. ஏனென்றால் உன்னியின் அறுவைச் சிகிச்சைக்கு மட்டுமே ரூ.15 லட்சம் தேவைப்பட்டது. ஆகையால் அவரது நண்பர்கள் நிதி திரட்டுவதற்கு வசதியாக உன்னியின் நிலைமை பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதைக்கண்டு ஓரளவுக்கு பண உதவி கிடைத்தது. அந்த பணத்தைக் கொண்டும், கடன் வாங்கியும் சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் உன்னி ஜார்ஜ். வாங்கிய கடனை கட்ட வேண்டும், வீட்டு செலவுக்கும் பணம் வேண்டுமே என எண்ணிய உன்னி ஜார்ஜ், அடுத்து என்ன செய்வது என்று குழம்பிப் போய் இருந்தார்.

Millionaire growth worker by using You Tube chennel

ஒருநாள் கழிமுகப்பகுதியில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தபோது, சமூக வலைத் தளமான யூடியூப்பில் உள்ள படங்கள் குறித்து, நண்பர்கள் எடுத்துக் கூறி இருக்கின்றனர். யூடியூப் உலகம் மிகப்பெரியதுஅதனுள் சென்று பார்த்தபோது, யூடியூப் உலகம் மிகப் பெரியது என்பதை உணர்ந்தார் உன்னி. OMKV Fishing & Cooking சானல் என்ற பெயரில் தனக்கென அக்கவுன்ட் கிரியேட் பண்ணிய உன்னி ஜார்ஜ், கழிமுகத்திலிருந்து தானே மீன்பிடித்து அதை சமைக்கவும் செய்தார். அதை நண்பர்கள் உதவியுடன் வீடியோ பதிவு செய்து, யூடியூப்பில் பதிவேற்றினார். நாளடைவில் வீடியோவிற்காக கொச்சி, திருவல்லா, கோழிக்கோடு, வயநாடு கடற்கரை பகுதிகளில் பயணம் செய்து, விதவிதமான மீன்களை பிடித்து தனக்கே உரிய தனித்துவப் பாணியில் உள்ளூர் முறையில் சமைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இதுவரை 143 வீடியோக்களை அவர் பதிவிட்டிருக்கிறார்.

Millionaire growth worker by using You Tube chennel


ஒவ்வொரு வீடியோவும் மலையாள மொழியில் கூற வேண்டும் எனில் அடிபொலி. உன்னியின் கைவண்ணத்தால்  யூ- டியூப்பில் பார்வைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதற்கேற்ப வருமானமும் ஒவ்வொரு மாதமும் லட்சத்தை தாண்டியிருக்கிறது. உன்னியின் யூ- டியூப் சேனலை சுமார் 2.74 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இதன் மூலம் இந்தியாவின் மிகப் பிரபலமான யூ- டியூப்  ஸ்டார்களில் ஒருவராக திகழ்கிறார் உன்னி ஜார்ஜ்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.