Skip to main content

மனிதவள மேம்பாட்டு அமைச்சக பெயர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாற்றப்பட்டது...

Published on 01/08/2020 | Edited on 01/08/2020

 

mhrd name changed officially in website

 

 

புதிய கல்விக் கொள்கையைத் தயார் செய்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர், மத்திய கல்வி அமைச்சகமாக மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

 

பள்ளி முதல் பல்கலைக்கழக கல்வி வரை அனைத்தையும் தனது பொறுப்பில் வைத்திருக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மத்திய கல்வி அமைச்சகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர், ராஜிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் அதன் பெயர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமாக மாற்றப்பட்டது. இதுநாள் வரை அந்த பெயரிலேயே இயங்கி வந்த இந்த அமைச்சகம், தற்போது புதிய கல்விக் கொள்கையைத் தயார் செய்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மீண்டும் பெயர்மாற்றம் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 29 அன்று மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலின்படி, இந்த மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர், மத்திய கல்வி அமைச்சகமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதன் பெயர் தற்போது மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை; மத்திய அமைச்சகம் திட்டவட்டம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Union Ministry Scheme for New Education Policy for Classes 3, 4, 5

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இந்த திட்டத்தை கடந்த கல்வி ஆண்டிலேயே, நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில் 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘3,4,5 ஆகிய வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும், பிரீ.கே.ஜி படிப்பில் சேர, மாணவர்களுக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எல்.கே.ஜி படிப்பிற்கு நான்கு வயதும், யு.கே.ஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு ரெடி

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

 Draft of State Education Policy ready

 

மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

580 பக்கங்கள் கொண்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவு தயாராக உள்ளதாக மாநில கல்விக் கொள்கை குழு தகவல் வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு மாநில கல்விக் கொள்கையை தயாரித்துள்ளது. நான்கு பேர் கொண்ட குழு மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 180 பக்கமுள்ள பரிந்துரைகள் மற்றும் 400 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குழப்பம் ஏற்படாமல் பரிந்துரைகளை சரியாக மொழிபெயர்க்கும் பணி நடந்து வருவதாக மாநில கல்விக் கொள்கை குழு தகவல் வெளியிட்டுள்ளது.