mj akbar

Advertisment

மீடூ புகாரில் தன் மீது புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார் எம்.ஜே. அக்பர். இவர் முன்பு மூத்த பத்திரிகையாளராக பணிபுரிந்து, பின்னர் பாஜகவில் இணைந்து வெளியுறவுத்துறை இணை அமைச்சராகினார். பின்னர் மீடூ புகாரினால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லி ராஜினாமா செய்தார். இந்த வழக்கு இன்று டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. அப்போது இந்த வழக்கிற்கான ஆதாரங்களை வருகின்ற 31ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று எம்.ஜே அக்பருக்கு உத்தரவிட்டு, அக்டோபர் 31ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.