சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த மெகபூபா முப்தி

meghabooba mufti who anointed the shiv lingam 

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் செயல் சமூக வலைதளங்களில்பேசுபொருளாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்திகாஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவகிரககோவிலுக்கு சமீபத்தில் சென்றபோதுஅங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கோவிலில் வழிபட்டார். இது தொடர்பானபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்சமூக வலைத்தளங்களில்வைரலாகியது. இதனைத்தொடர்ந்து, மெகபூபா முப்தியின்செயலுக்கு ஆதரவாகவும்எதிராகவும் இணையவாசிகள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மெகபூபா முப்தி கருத்து தெரிவிக்கையில், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.இங்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணக்கமாக வாழ்கின்றனர். தர்காவிற்கு வந்து இந்துக்கள் தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்துகின்றனர். இதுபோன்ற செயல்களைச் செய்வது நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

kashmir secularism
இதையும் படியுங்கள்
Subscribe