Advertisment

9 பெண்கள் மீ டூ புகார்; வானொலி நிலைய ஊழியர் மீது நடவடிக்கை...

met

மீ டூ ஹாஷ்டாக் மூலம் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் டெல்லியில் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தில் உள்ள அதிகாரி மீது அவருடன் வேலை பார்க்கும் 9 பெண்கள் தேசிய பெண்கள் ஆணையத்தில் மீ டூ குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு அந்த அதிகாரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு தண்டனையாக ஒரு ஆண்டு தற்காலிக பதவியிறக்கமும், சம்பள பிடித்தமும் செய்யப்படும் என பெண்கள் ஆணையம் அறிவித்துள்ளது.. பாலியல் புகாருக்கு இவ்வளவு குறைவான தண்டனையா என்று புகார் அளித்த பெண்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisment

Delhi fm station meetoo
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe