குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்ரா ஆகிய மூன்று மாநிலங்களின் ஜீவ நதியான நர்மதை ஆற்றின் நீர் தேக்கம் மத்திய பிரதேசம், குஜராத் என இரு மாநிலத்தில் சர்தார் சர்வேயர் அணையில் இருக்கிறது. தொடக்கத்தில் 122 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணை அவ்வப்போது உயரம் அதிகரிக்கப்பட்டு இப்போது 139 மீட்டராக உள்ளது.

Advertisment

 Medha Patkar completed fasting ...

இதில் தற்போது 138 மீட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அணைப் பகுதியின் நீர்தேக்க கிராமங்கள் நூற்றுக்கணக்கில் நீரில் மூழ்கியது. பல ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள், நிலங்களும் மூழ்கி விட்டது. இதை கண்டித்த சமூக செயற்பாட்டாளரும், மக்கள் போராளியுமான மேதாபட்கர் மத்திய பிரதேச மாநிலம் பட்வானி என்ற பகுதியில் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை திறந்துவிட்டு நீரின் அளவை குறைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, நிவாரணம் முறையாக கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

 Medha Patkar completed fasting ...

Advertisment

இந்நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மேதா பட்கரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியை கொடுத்ததோடு அரசு அறிவிப்பாகவும் அறிவித்திருக்கிறது. இதன் பிறகு 10ம் நாளான நேற்று மாலை தனது உண்ணாவிரத்தை நிறைவு செய்தார் மேதா பட்கர்.