Skip to main content

சாதியை நம்பி சறுக்கிய முக்கிய தலைவர்கள்... பாஜக வெற்றி ரகசியம்..!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

மக்களவை தேர்தல் முடிந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் கனவுடன் மூன்றாவது அணி, மெகா கூட்டணி என பல வியூகங்களை வகுத்த உத்தரப்பிரதேசத்தின் மாயாவதி, அகிலேஷ் யாதவ் காட்சிகள் இந்த தேர்தலில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளன. இதற்கு சாதிய ரீதியிலான அரசியலே காரணம் என கணிக்கப்பட்டுள்ளது.

 

mayawati and akilesh yadav community politics in uttarpradesh

 

 

உத்தரபிரதேசத்தில் சுமார் 22 சதவீதம் உள்ள யாதவர் சமூகத்திற்கு ஆதரவான கட்சியாக கருதப்படும் அகிலேஷின் சமாஜ்வாதி மற்றும் 22 சதவீத தலித்துகளுக்கு ஆதரவான கட்சியாக பார்க்கப்படும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன. சாதிய வாக்குகளை கணக்கில் கொண்டு எதிரி கட்சிகளான இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தன.

ஆனால் இவர்கள் இருவரும் எதிர்பார்த்தது போல அல்லாமல், அனைத்து சமூக மக்களும் சாதி ரீதியில் வாக்குகளை அளிக்காமல் நலப்பணிகளை பார்த்து வாக்களித்தது தேர்தல் முடிவுகள் தெரியவந்துள்ளது. பாஜக அமல்படுத்திய அனைத்து வீடுகளுக்குமான மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு, தூய்மை இந்தியா மற்றும் வீடுகட்டும் திட்டங்களால் அதிக பலன் அடைந்த உ.பி.யின் கிராமப்புற மக்கள் இந்த இரண்டு கட்சிகளையும் விடுத்து பாஜக விற்கு வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது.

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்தே இந்த தேர்தலில் 37 சதவீத வாக்குகளை மட்டும் பெற்ற நிலையில், பாஜக 49.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக சாதிய அரசியலை மையமாக கொண்டு கட்டமைக்கப்பட்ட உத்தரபிரதேச அரசியலில் இந்த தேர்தல் புதியதாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் உத்தரபிரதேச மக்கள் சாதிய பிடிப்புகளை தகர்த்து முன்னேற்றத்தை நோக்கிய அரசியலை முன்னெடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மனைவி வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்; பதறி அடித்து போலீசிடம் ஓடிய கணவர்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
The husband ran to the police in panic for Whatsapp status by wife

உத்தரப்பிரேதசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்து போன மனைவி, தனது கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும், அவர் நிரந்தரமான விவாகரத்து கேட்டும் வந்துள்ளார். இதனிடையே, கணவரை விட்டு பிரிந்து வாழ்வதால், முறையான விவாகரத்து கிடைக்கும் வரை தனக்கான பராமரிப்பு தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை, சமாதானம் செய்வதற்காக மனைவி வீட்டுக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால், அங்கு, மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். மேலும், மனைவி தனது பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதுவே தகராறுக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரை அடுத்து கோபமடைந்த மனைவி, தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‘என்னுடைய கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை உடனடியாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். இந்த விவரம் கணவருக்கு தெரியவர, பதறி அடித்து போன அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும், இந்த தம்பதிகள் மாறி மாறி அளித்த புகார்கள் மீது கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், இந்த முறை பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொண்ட அவர்கள், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.