Skip to main content

சாதியை நம்பி சறுக்கிய முக்கிய தலைவர்கள்... பாஜக வெற்றி ரகசியம்..!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

மக்களவை தேர்தல் முடிந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் கனவுடன் மூன்றாவது அணி, மெகா கூட்டணி என பல வியூகங்களை வகுத்த உத்தரப்பிரதேசத்தின் மாயாவதி, அகிலேஷ் யாதவ் காட்சிகள் இந்த தேர்தலில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளன. இதற்கு சாதிய ரீதியிலான அரசியலே காரணம் என கணிக்கப்பட்டுள்ளது.

 

mayawati and akilesh yadav community politics in uttarpradesh

 

 

உத்தரபிரதேசத்தில் சுமார் 22 சதவீதம் உள்ள யாதவர் சமூகத்திற்கு ஆதரவான கட்சியாக கருதப்படும் அகிலேஷின் சமாஜ்வாதி மற்றும் 22 சதவீத தலித்துகளுக்கு ஆதரவான கட்சியாக பார்க்கப்படும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன. சாதிய வாக்குகளை கணக்கில் கொண்டு எதிரி கட்சிகளான இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தன.

ஆனால் இவர்கள் இருவரும் எதிர்பார்த்தது போல அல்லாமல், அனைத்து சமூக மக்களும் சாதி ரீதியில் வாக்குகளை அளிக்காமல் நலப்பணிகளை பார்த்து வாக்களித்தது தேர்தல் முடிவுகள் தெரியவந்துள்ளது. பாஜக அமல்படுத்திய அனைத்து வீடுகளுக்குமான மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு, தூய்மை இந்தியா மற்றும் வீடுகட்டும் திட்டங்களால் அதிக பலன் அடைந்த உ.பி.யின் கிராமப்புற மக்கள் இந்த இரண்டு கட்சிகளையும் விடுத்து பாஜக விற்கு வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது.

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்தே இந்த தேர்தலில் 37 சதவீத வாக்குகளை மட்டும் பெற்ற நிலையில், பாஜக 49.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக சாதிய அரசியலை மையமாக கொண்டு கட்டமைக்கப்பட்ட உத்தரபிரதேச அரசியலில் இந்த தேர்தல் புதியதாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் உத்தரபிரதேச மக்கள் சாதிய பிடிப்புகளை தகர்த்து முன்னேற்றத்தை நோக்கிய அரசியலை முன்னெடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.