Skip to main content

கடல் வளத்தை அழிக்கும் பிளாஸ்டிக்... எச்சரிக்கும் கேரள இளைஞர்!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

2025 ஆண்டு வாக்கில் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக்கே அதிகமாக இருக்கும். இப்படித் தான் புள்ளி விபரங்கள் நமது வயிற்றில் புளியை கரைக்கின்றன. இதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் நெகிலிப் பைகள், தேநீர் கோப்பைகள், நெகிலி தட்டுக்கள். பிளாஸ்டிக் பாட்டில்கள் இந்த பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்தாலும், இந்த நிமிடம் வரை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

 Marine pollution plastics  Kerala youth alert awareness


நாளைய தலைமுறை எக்கேடு கெட்டால் நமக்கு என்ன? என்று நாம் இருக்கிறோம். ஆனால், கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள சோம்பலா என்ற கிராமத்தை சேர்ந்த பிரயேஷ், இதுவரை 13.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் இருந்து அகற்றி இருக்கிறார். அவரது இந்த முயற்சிக்கு, நண்பர்களும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். 

“கடற்கரையில் தான் அதிகமான குப்பைகள் இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், கடலின் ஆழமான பகுதிகளில் கூட குப்பைகளை காண முடிகிறது. படகுகளில் செல்லும் பயணிகள் அல்லது சுற்றுலாவாசிகள் மட்டும் இதற்கு காரணமல்ல. தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களை கடலுக்குள் தூக்கியெறியும் மீனவர்களும் இதற்கு பொறுப்பாவர்கள்” என்கிறார் பிரயேஷ்.

 Marine pollution plastics  Kerala youth alert awareness

 
சில சமயங்களில் அக்கம் பக்கத்தினரின் கேலிப் பேச்சும் மக்களின் அக்கறையின்மையும் அவரை பாதித்தாலும், தனது முயற்சியில் தளராமல் இருக்கிறார் பிரயேஷ். தான் செய்வதை பார்த்து யாராவது ஒரு நபர் உத்வேகம் அடைந்து அவரது பகுதிகளில் இதை செயல்படுத்தினால், இது ஒரு சங்கிலித் தொடராக ஆரம்பமாகும் என நினைத்தார். அவரது எண்ணத்திற்கு ஏற்ப அருகே உள்ள ஆழியூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் பிரயேஷுடன் இணைந்து இப்போது, பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் இதுவரை கடலில் இருந்து 13.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.

 Marine pollution plastics  Kerala youth alert awareness

"மீன் வலையில் 50 கிலோ மீன் சிக்குகிறது என்றால், அதில் 13 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகளே இருக்கும். இதன் மூலம் எந்தளவிற்கு கடலில் பிளாஸ்டிக் மிதக்கிறது என்பதையும், இனிவரும் தலைமுறை மீன் பிடிக்கமாட்டார்கள் பிளாஸ்டிக்கை தான் பிடிப்பார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்று எச்சரிக்கிறார் பிரயேஷ்.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.