Published on 06/08/2020 | Edited on 06/08/2020

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணைநிலை ஆளுநராக பாஜகவைச் சேர்ந்த மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநராக இருந்த ஜி.சி.முர்முவின் ராஜினாமாவை ஏற்று கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்நிலையில், ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் இணை அமைச்சராக பணியாற்றிய மனோஜ் சின்ஹா ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான மனோஜ் சின்ஹா காசியாப்பூர் மக்களவை எம்.பி.யாக மூன்று முறை தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.