இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அவர்எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
இந்தநிலையில்ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய எய்ம்ஸ் மருத்துவர்கள், மன்மோகன் சிங் காய்ச்சல் காரணமாக அங்கு அனுமதிக்கப்பட்டிருப்பதைஉறுதி செய்ததோடு, அவரின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
89 வயதான மன்மோகன் சிங், கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டார்என்பது குறிப்பிடத்தக்கது.