Advertisment

அதிகரிக்கும் கரோனா பரவல்: 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்த வடகிழக்கு மாநிலம்!

corona

Advertisment

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலையின்பாதிப்பு குறைந்துவருகிறது. இதனையடுத்துபல்வேறு மாநிலங்கள், தாங்கள் அமல்படுத்திய ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளைஅறிவித்துவருகின்றன. அதேசமயம், வடகிழக்கு மாநிலங்களில் கரோனாபரவல் அதிகரித்துவருகிறது. இதையடுத்துபிரதமர் மோடி, எட்டு வடகிழக்குமாநில முதல்வர்களுடன் காணொளிவாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இதனையடுத்து, கடந்த ஒன்பதாம் தேதி மணிப்பூர் மாநில அரசு, இரவு நேர ஊரடங்கைமாலை 7 மணியிலிருந்து காலை ஐந்து மணிவரைநீட்டித்தது. இருப்பினும் கரோனா பரவல் குறையவில்லை. இதனையடுத்துமணிப்பூர் மாநில அரசு, அம்மாநிலதில்10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்த முழு ஊரடங்கு வரும் 18ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கரோனாபரிசோதனை செய்துகொள்ளவும் வெளியே வர மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

lockdown coronavirus manipur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe