Skip to main content

மாங்காய் திருடிய சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை!!

Published on 22/06/2018 | Edited on 22/06/2018

 

பீகாரில் பத்து வயது சிறுவன் தோட்ட உரிமையாளருக்கு தெரியாமல் மாங்காய் பறித்ததால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

death

 

death

 

 

 

பீகாரில் ககாரியா கிராமப்பகுதியில்  ஒரு சிறுவன் அருகிலுள்ள மாங்காய் தோட்டத்தில் மாங்காய் திருடியுள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த தோட்ட உரிமையாளர் துப்பாக்கியால் அந்த சிறுவனின் தலையில் சுட்டு கொன்றுவிட்டு தப்பி தலைமறைவானதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

 

 

துப்பாக்கி குண்டுகளை தலையில் ஏந்திய பத்து வயது சிறுவனின் உடலை மீட்ட போலீசார் தோட்ட உரிமையாளரை தேடிவருகின்றனர்.  சிறுவனை இழந்த பெற்றோர் இந்த சிறிய குற்றத்திற்கு உயிர் பலியா  என கதறி அழுதகாட்சி பெரும் சோகத்தையும் ககாரியா பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்