Advertisment

ஆற்றை கடக்க முயன்ற இளைஞரை அடித்து சென்ற வெள்ளம்!

மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜ்கர் அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் ஒரு வாலிபர் ஆற்றைக்கடக்க முயற்சி செய்துள்ளார். தொடக்கத்தில் நிதானமாக ஆற்றை கடந்த அவர், சிறிது தூரம் சென்ற பிறகு நிலை தடுமாறினார்.நீரின் வேகம் திடீரென அதிகரித்த காரணத்தால் அவர் செய்வதறியாது தவித்தார்.

Advertisment

j

நீரின் வேகம் மேலும் அதிகரித்ததால் நிலையாக நிற்க முடியாமல் திணறிய அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கரையிலிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அவரது சடலத்தை போலீஸார் மீட்டுள்ளனர்.

rivers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe