Advertisment

கிணற்றுக்குள் விழுந்து மலைப்பாம்பு... மீட்கப்போனவரின் உடலை சுற்றியதால் பரபரப்பு!

கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பெராமங்கலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிற்குள் மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற சாகில் என்ற வனத்துறை ஊழியர் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி பாம்பை மீட்க முயற்சித்துள்ளார்.

Advertisment

bn

நீண்ட முயற்சிக்குப் பிறகு பாம்பைப் பிடித்த அவர் மேலே ஏற முயற்சித்தபோது பாம்பு அவருடைய உடலை சுற்றி வளைக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும் பாம்பை பிடித்துக்கொண்டே அவர் கயிற்றைப் பிடித்து மேலே ஏற முயற்சித்துள்ளார். அப்போது அவர் நொடியில் திடீரென பாம்புடன் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது.

snake
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe