Skip to main content

ஸ்நேக்குடன் செல்ஃபி; ‘படம்’ எடுத்த பாம்பினால் உயிர்விட்ட நபர்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

A man passed away after trying to take a selfie with a snake

 

பாம்புடன் செல்பி எடுக்க முயன்ற நபர் அதே பாம்பினால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி. 28 வயதான இவர் கந்தகுரு என்ற இடத்தில் பழச்சாறு கடை வைத்து நடத்தி வந்தார். தனது கடையிலிருந்து வீடு திரும்பிய மணிகண்டா ரெட்டி பேருந்து நிலையத்தை கடந்து சென்றுகொண்டிருந்தபோது அங்கு பாம்பினை வைத்து ஒரு நபர் வித்தை காட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். உடனே அந்த பாம்புடன் செல்பி எடுக்க வேண்டும் என்று நினைத்த மணிகண்டா ரெட்டி அந்த பாம்பின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். இதற்கு பாம்பின் உரிமையாளர் மறுப்பு தெரிவிக்க பணம் கொடுத்து பாம்பின் உரிமையாளரை சம்மதிக்க வைத்துள்ளார். 

 

பணத்தை கொடுத்த பின் பாம்பினை தனது கழுத்தில் சுற்றிவிடும்படி பாம்பின் உரிமையாளரிடம் மணிகண்டா ரெட்டி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரும் பாம்பினை மணிகண்டா ரெட்டியின் கழுத்தில் சுற்றிவிட பாம்புடன் மணிகண்டா ரெட்டி செல்பி எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாம்பினை கழுத்திலிருந்து எடுக்க முற்பட்டபோது பாம்பு மணிகண்டா ரெட்டியை கடித்துவிட்டது.

 

வலியால் துடித்த அவரை அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.