குஜராத் மாநிலம் கம்பிலியா மாவட்டத்தை சேர்ந்தவர் சோலாங்கி. 40 வயதான இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். இந்நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை என்ற செய்தி கிடைத்த உடன் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் கோபமாக இருந்த அவர் நேற்று தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசியுள்ளார். பிறகு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதுதொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையின் முடிவில் தொடர்ந்து பெண் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.