Skip to main content

கணவரிடம் இருந்து வந்த வாய்ஸ் மெசேஜ்... காவல்நிலையத்தில் புகார் கொடுத்த இளம்பெண்!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

கர்நாடக மாநிலம் ஷிவமோக்காவைச் சேர்ந்தவர் ஆயிஷா. இவரது கணவரான முஸ்தபா துபாயில் வேலைப் பார்த்து வருகிறார். தனது வளர்ப்பு மகளுடன் வசித்து வரும், ஆயிஷா சித்திக்கி தற்போது கணவரின் செயலால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். துபாயில் உள்ள தனது கணவர், தற்போது வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் வாயிலாக, மனைவி ஆயிஷாவிற்கு முத்தலாக் கூறியுள்ளார். இதனால் நிலைக்குலைந்துப் போன அவர், தற்போது, காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
 

ghkj



இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது கணவர் முத்தலாக் கூறி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால் நான் இந்த விவாகரத்தை ஏற்கவில்லை. போலீசில் வழக்குப் பதிவு செய்துள்ளேன். எனக்கு நீதி வேண்டும். கடந்த 21 ஆண்டுகளாக எந்தச் சிக்கலும் இல்லாமல் சந்ஷோசமாகவே வாழ்ந்தோம். ஆரம்பத்தில் எங்களுக்குக் குழந்தை இல்லாத பிரச்சினையைக் கூட அவர் பெரிதாக்கவில்லை. ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தோம். அவளுக்கு தற்போது 16 வயது ஆகிறது. இப்போது திடீரென தலாக் கூறுகிறார். என்னுடைய கணவர் எந்தவித நிதியுதவியும் செய்வதில்லை. என் மகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. எனது கணவரின் குடும்பம் அதிக செல்வாக்கு உள்ளவர்கள். இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறாவது முறை திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர்... மூன்றாவது மனைவி புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

former up minister

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாயாவதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் சவுத்ரி பஷீர். இவர் மீது இவரது மூன்றாவது மனைவியான நக்மா, ஆக்ரா காவல்துறையிடம் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், சவுத்ரி பஷீர் ஆறாவது முறையாக திருமணம் செய்ய முயற்சி செய்வது தனக்குத் தெரியவந்ததாகவும், இதனையடுத்து அவரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் தன்னை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

 

மேலும், சவுத்ரி பஷீர் முத்தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்துவிட்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆக்ரா காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் மீது ஐபிசி பிரிவு 504இன் கீழும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019இன் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

நக்மாவும் சவுத்ரி பஷீரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு தன்னை சவுத்ரி பஷீரும் அவரது சகோதரியும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து சவுத்ரி பஷீர் 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு கோயில் கட்டும் இஸ்லாமிய பெண்கள்... காரணம்..?

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

இஸ்லாமிய பெண்கள் குழுவாக இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி வருகின்றனர்.  

 

uttarpradesh women bulids temple for modi

 

 

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் சிலர் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். பாஜக அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை மசோதாவுக்கு தங்களது நன்றிகளை தெரிவிக்கும் வகையில் இந்த கோவிலை கட்டியெழுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிற்கு தலைமை தாங்கும் ரூபி கஸ்னி இதுகுறித்து கூறுகையில், "இஸ்லாமிய பெண்களுக்காக பிரதமர் நிறைய செய்துள்ளார், மேலும் அவர் மதிக்கப்படுவதற்கு தகுதியானவர். முத்தலாக் மசோதா மூலம் இஸ்லாமிய பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார் அவர். மோடிக்கு உலகம் முழுவதும் பாராட்டு தெரிவிக்கப்படும் நிலையில் நமது சொந்த நாட்டில் அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்" என்று கூறினார்.