நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது . இதில் ஏற்கெனவே நான்கு கட்டத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் இன்று ஏழு மாநிலங்களில் 51 மக்களவை தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்டத்தேர்தல் நடைபெற்று வருகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில் மத்திய பிரதேசத்திலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அந்தவகையில் மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் இறந்த தந்தையின் இறுதி சடங்கை முடித்த ஒருவர் நேரடியாக வாக்குசாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார். தந்தை இறந்த சோகத்திலும், அவரது இறுதி சடங்கினை முடித்த கையோடு வாக்களிக்க வந்த இவரை பாராட்டி பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.