ADVERTISEMENT

2014, 2016 பார்முலாவை மீண்டும் பின்பற்றும் மம்தா பானர்ஜி...

05:22 PM Mar 06, 2019 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ல் கட்சியின் மகளிர் பேரணியோடு தொடங்கிவைக்கிறார். இதுகுறித்து அக்கட்சி நிர்வாகி தெரிவிக்கையில், "இன்னும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எனினும், நாங்கள் வரும் மார்ச் 8 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். 2014 நாடாளுமன்ற தேர்தலின்போதும், 2016 சட்டமன்ற தேர்தலின்போதும், சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதிதான் மம்தா தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்தார். அதேபோல இந்த ஆண்டும் தொடங்க திட்டமிட்டுளோம் " என தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஆட்சியை அகற்ற ஆதரவு தரும் அனைவரும் ஒன்று கூடுங்கள் என மம்தா பானர்ஜி பிரச்சார கூட்டத்திற்கான அழைப்பை அனைவருக்கும் விடுத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT