Advertisment

'மக்களவை தேர்தலுக்கு பின் பாஜக சிலை போல் ஆகிவிடும்'- மம்தா பானர்ஜி

mamta

குஜராத்தில் ரூ 3000 கோடி செலவு செய்து சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை நிறுவியது பாஜக, அதேபோல அயோத்தியில் நூறு அடிக்குமேல் ராமர் சிலையை நிறுவ உள்ளது. இதுகுறித்து கொல்கத்தாவில் நேற்று நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,” பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாட்டின் முக்கிய அமைப்புகளை அழித்து வருகின்றது. ரிசர்வ் வங்கி, சிபிஐன் செயல்பாடுகளை மாற்றி அமைக்க முயற்சிக்கிறது. சிலைகளை நிறுவி வரும் பாஜக அடுத்த மக்களவை தேர்தலுக்கு சிலை போல் மாறி விடும்” என்றார்.

Advertisment

மேலும், வருகின்ற ஜனவரி மாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய பேரணி பாஜகவுக்கு எதிராக நடைபெறும் என்றும். இதில் பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்க உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் பேசினார்.

Advertisment

kolkata tirunamool congress mamta banarji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe