ADVERTISEMENT

"டெல்லியை சமாளித்துவிட்டு மேற்கு வங்கத்தை பற்றி யோசியுங்கள்" - சட்டப்பேரவையில் மம்தா ஆவேசம்!

03:46 PM Jan 28, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ட்ராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “டெல்லியின் நிலைமையை மோடி அரசு மோசமாக கையாண்டுள்ளது. முதலில் டெல்லியைச் சமாளித்து மேற்கு வங்கத்தை நினைத்துப் பாருங்கள்” என ஆவேசமாக கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “டெல்லியின் நிலையை காவல்துறையால் சமாளிக்க முடியவில்லை. ஒருவேளை அது மேற்கு வங்கமாக இருந்திருந்தால், சகோதரர் அமித் ஷா, ‘என்ன நடந்தது’ என கேட்டிருப்பார். இந்த அணுகுமுறையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒன்று நீங்கள் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் அல்லது நாற்காலியை விட்டு வெளியேறுங்கள்.

நாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம். இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என விரும்புகிறோம். வேளாண் சட்டங்கள் பலவந்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லியின் நிலைமையை மோடி அரசு மோசமாக கையாண்டுள்ளது. அங்கு நடந்ததற்கு பாஜகதான் பொறுப்பு. முதலில் டெல்லியைச் சமாளித்துவிட்டு மேற்கு வங்கத்தைப் பற்றி யோசியுங்கள்” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT