டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியது குறித்து மம்தா பானர்ஜி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

mamata banerjee about jnu incident

நேற்று இரவு நடந்த இந்த தாக்குதல் குறித்த முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, "இது மிகவும் கவலைக்குரியது. இது ஜனநாயகம் மீதான ஆபத்தான நடப்பட்ட தாக்குதல் ஆகும். அவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் பாகிஸ்தானியர்கள் மற்றும் நாட்டின் எதிரி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இதற்கு முன்னர் நாட்டில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை பார்த்ததில்லை. டெல்லி காவல்துறை அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டில் கிடையாது. அது மத்திய அரசின் கீழ் உள்ளது. ஒருபுறம் அவர்கள் பாஜக குண்டர்களை அனுப்பியுள்ளனர், மறுபுறம் அவர்கள் காவல்துறையை செயலற்றவர்களாக மாற்றியுள்ளனர். அதிகாரம் படைத்தவர்களின் பேச்சை மீறி போலீசாரால் என்ன செய்ய முடியும். இது ஒரு பாசிச சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்" என தெரிவித்துள்ளார்.