மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராஉள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது.மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்தற்போதைய நிலைப்படி பாஜக கூட்டணி 326 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 101 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இதில் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, அசாதுதீன் ஒவைசி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகராவின் மகள் கவிதா,தேவகவுடாஉள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.