Skip to main content

காங்கிரஸ் பிரமுகர் கொலையின் முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!!

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (42). காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்து வந்தார். சாசன் மருந்து கம்பெனி உள்ளிட்ட  தனியார் நிறுவனங்களில் காண்ட்ராக்ட்கள் எடுத்து செய்து வந்தார். கடந்த 30-ந் தேதி காலாப்பட்டில் உள்ள தனது வீட்டிற்கு  புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போது வழிமறித்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.

 

murder

 

 

 

இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் காண்ட்ராக்ட்  செய்வதில் ஏற்பட்ட தொழில்போட்டி காரணமாக கூலிப்படை வைத்து ஜோசப் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், செல்வ குமார், பார்த்திபன் உள்பட 6 பேர்  கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிள்ளைச்சாவடி சங்கர் கணேஷ், கருவடிக்குப்பத்தை சேர்ந்த சாண்டில்யன் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களில் சங்கர்கணேசை ஏற்கனவே காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக சாண்டில்யனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். 

 


விசாரணையில் "சிறு வயதில் இருந்தே சங்கர்கணேஷ் எனக்கு நண்பர். அதேபோல் தாதா மணிகண்டனும் நெருங்கிய நண்பர். நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசி வந்தோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் சந்தித்த போது  எங்களுக்கு எதிராக இருக்கும் தொழில் அதிபர் ரிலையன்ஸ் பாபுவை கொலை செய்வது என்று அப்போது முடிவு செய்தோம். இந்த சம்பவத்தை நிறைவேற்ற தேவையான உதவிகளை செய்வதாக சங்கர் கணேஷ் உறுதி அளித்தார். அதற்கு கைமாறாக காங்கிரஸ் பிரமுகரான காலாப்பட்டு ஜோசப்பை கொலை செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார்.

 

 

 

இதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம். ரிலையன்ஸ் பாபு, காலாப்பட்டு ஜோசப் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து கொலை செய்வது என்று திட்டமிட்டோம். அதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் பாபுவை கொலை செய்ய ஒரு அணியும், ஜோசப்பை கொலை செய்ய மற்றொரு அணியும் தயார் செய்யப்பட்டது. திட்டமிட்டபடி முதலில் ரிலையன்ஸ் பாபுவை கொலை செய்தோம். அந்த கொலைக்கு சங்கர் கணேஷ் தன்னுடைய காரை கொடுத்து உதவி செய்தார். மேலும் பணம் மற்றும் ஆட்கள் உதவியும் செய்தார். அந்த கொலையை முடித்ததும் அடுத்து ஜோசப்பை கொலை செய்வதற்கு தயாரானோம்.

 

இதற்காக சுமார் ஒரு வார காலமாக ஜோசப்பின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தோம். அவரை கொலை செய்ய கடலூர், அரியாங்குப்பம், தட்டாஞ்சாவடி, குயிலாப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து 4 கூலிப்படைகளை ஏற்பாடு செய்தோம். இந்தநிலையில் ரிலையன்ஸ் பாபு கொலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி எங்களை கைது செய்வதற்கு நெருங்கினர். போலீசார் எங்களை கைது செய்தால் சிக்கல் ஆகிவிடும் என்பதால் ஜோசப்பை கொலை செய்யும் திட்டத்தை தீவிரப்படுத்தினோம். அவரை எப்படியாவது கொலை செய்துவிடுவது என்பதற்காக அவருடைய வீடு அருகில் இருந்து அடிக்கடி அவர் செல்லும் இடங்களில் எங்கள் ஆட்கள் கண்காணித்தனர்.

இறுதியாக கடந்த 30-ந் தேதி ஜோசப்பை கொலை செய்வது என முடிவு செய்து அதற்கு தயாரானோம். காரில் வந்தாலும் சரி, மோட்டார் சைக்கிளில் வந்தாலும் சரி எப்படியாவது அவரை கொலை செய்வது என்று முடிவு செய்திருந்தோம். அன்றை தினம் மதியம் அவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். எங்கள் ஆட்கள் மூலம் இந்த தகவல் தெரியவந்தது. உடனே நாங்கள் தயாரனோம். புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகே ஜோசப் வந்தபோது அவரை கொலை செய்ய முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.

 

அதைத்தொடர்ந்து அவரை நானும் (சாண்டில்யன்), மைக்கேல் ஏழுமலை என்பவரும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றோம். பெரியமுதலியார் சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் அவர் மீது மோதுவது போல் மைக்கேல் ஏழுமலை நெருக்கமாக ஓட்டிச்சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பின்னால் உட்கார்ந்திருந்த நான் வீச்சாரிவாளை எடுத்து ஜோசப்பை வெட்டினேன். ஒரே வெட்டில் ஜோசப் கீழே விழுந்தார். அதன்பிறகு நாங்கள் தப்பிச்சென்றுவிட்டோம்.

 

 

 


அங்கு வைத்து நாங்கள் வெட்டவில்லை என்றாலும் அடுத்தடுத்து வழியில் பல இடங்களில் நின்று கொண்டிருந்த எங்கள் ஆட்கள் நிச்சயமாக ஜோசப்பை வெட்டி கொலை செய்திருப்பார்கள்" என சாண்டில்யன் வாக்குமூலம் அளித்திப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து சாண்டில்யனிடமும், மற்ற குற்றவாளிகளிடமும்  ஜோசப்பை கொலை செய்ய தூண்டியவர்கள் யார்? யார்? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பன போன்ற தகவல்களை  பற்றி விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.